சீட் தர 5 கோடி பணம் கேட்டார் ராமதாஸ்- குண்டு போடும் வேல்முருகன் கோஷ்டி
சேலம்: சட்டசபைத் தேர்தலில் சீட் தர வேண்டுமானாலும் ரூ. 5 கோடி பணம் தர வேண்டும் என்று கூறினார் டாக்டர் ராமதாஸ் என்று பாமகவின் முன்னாள் எம்.எல்ஏக்கள் காவேரி, காமராஜ் ஆகியோர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த இருவரும் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமீபகாலமாக கடுமையான உழைப்பாளிகள், மூத்த உறுப்பினர்கள், திறமையான இளைஞர்களை பாமகவில் இருந்து நீக்குவது தொடர்கதையாகி வருகிறது. தனது மகன் அன்புமணியிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று ராமதாஸ் நினைப்பதே இதற்கு காரணம்.
ராமதாசின் தொழில் முறை பங்குதாரரான ஜி.கே.மணியை அவரால் நீக்க முடியாது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது போட்டியிட வாய்ப்பு கேட்ட அனைவரிடமும் தலா ரூ. 5 கோடி கேட்டு பேரம் பேசினார். போட்டியிட்டு தோற்ற பலரது சொத்துகளை தனது குடும்பத்தினர் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டார். பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்கள்.
தமிழ் உணர்வு மிக்க இளைஞரான வேல்முருகனை கட்சியிலிருந்து நீக்கியதுடன் அவரது குடும்பத்தையும் ராமதாஸ் இழிவுபடுத்தியது வேதனைக்குரியது. எங்களை போல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் வேல்முருகன் தலைமையில் விரைவில் புதிய இயக்கம் துவங்க உள்ளோம்.
8 மாவட்டங்களில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது. முன்னாள் எம்பிக்கள் புதா.இளங்கோவன், துரை, அருள்மொழி, முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதிய இயக்கம் வன்னிய மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைவரின் உரிமைகளுக்காகவும் பாடு படும். நாங்கள் தான் உண்மையான பாமகவினர் என்பதை நிரூபிப்போம் என்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications