பெத்திக்குப்பத்தில் 79 கோடியில் நவீன சோதனை சாவடி-ஜெ. அறிவிப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பெத்திக்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியாக உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தச் சோதனைச் சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட 79 கோடியே, 77 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
அண்டை மாநிலங்களுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லுதல், அத்தியாவசிய பொருட்களை கடத்துதல்; வரி ஏய்ப்பு போன்ற சமூக விரோத செயல்களை தடுக்கும் வண்ணம், தமிழக எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக எல்லைப் பகுதிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கல் மற்றும் அதற்கான கட்டணத்தை வசூல் செய்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்படி சோதனைச் சாவடிகள் ஆற்றுகின்றன.
இந்தப் பணிகளை போக்குவரத்துத் துறையினர் மேலும் திறம்பட ஆற்றும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலுள்ள பெத்திக்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியாக உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நவீன சோதனைச்சாவடி
இந்தச் சோதனைச் சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள், கிடங்கு வசதிகள், சோதனைச் சாவடி நிலையங்கள், சாலை குறியீட்டு பலகைகள் மற்றும் நவீன மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள், கணினி ஆகிய வசதிகளும் இடம் பெறும். இச் சோதனைச் சாவடியில் போக்குவரத்துத் துறை, காவல் துறை, வருவாய் துறை, வணிகவரித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகிய துறைகளுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டு அவை ஒருங்கிணைந்து செயல்படும்.
79 கோடியே 77 லட்சம்
இதனை நிறைவேற்றும் வகையில் பெத்திக்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நவீன கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர பணிகளுக்காக 79 கோடியே 77 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார். பெத்திக்குப்பம் சோதனைச் சாவடி நவீனமயமாக்கப்பட்டு, பல துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் சோதனைச் சாவடியாக மாற்றப்படுவதன் மூலம், அதிக வாகனங்கள் குறைவான நேரத்தில் கையாளப்படுவதோடு, வாகனங்கள் அதிக நேரம் நிற்பது தவிர்க்கப்படும்.
இது மட்டுமல்லாமல் பொருட்கள் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவில் சென்றடையவும் வழிவகை ஏற்படும். மேலும் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படுவதால், வரி ஏய்ப்பு, அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல், மது மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல், போன்ற சமூக விரோதச் செயல்கள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications