எழும்பூர் வரை ரயில் இயக்க கோரி பாவூர்சத்திரத்தில் வியாபாரிகள் ஊர்வலம்
நெல்லை: தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் தாம்பரத்துடன் நிறுத்த திட்டமிடுவதை கண்டித்து பாவூர்சத்திரத்தில் வியாபாரிகள் ஊர்வலம் நடத்தினர்.
தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தற்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை செல்கின்றன. இதனை தாம்பரம் ரயில் நிலையத்துடன் நிற்க செய்வதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வியாபாரிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் செங்கோட்டை கிளை சார்பாக செங்கோட்டை ரயில் நிலைய மாஸ்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. முன்னதாக அவர்கள் செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையில் இருந்து ரயில் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர். ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ஸ்டேஷன் மாஸ்டர் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனகர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
தெற்கு ரயில்வே தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள், தற்போது எக்மோர் வரை செல்வது ரயில்வே நிர்வாகத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் அந்த ரயில்களை தாம்பரத்தோடு நிறுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. அவ்வாறு செய்தால் தென் தமிழக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் உடனே கைவிட வேண்டும் என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications