கரூரில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் நகரமான கரூரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தனியார் அலுவலக பணியாளர்கள், தினக்கூலி பணியாளர் என்று பலத்தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கரூரில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக காய்கறிகள் வழக்கமான விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கரூர் பஸ் நிலையம் மக்கள் நடமாட்டம் குறைந்து விளையாட்டு மைதானம் போல் காட்சி தருகின்றது. மழை காரணமாக பொது மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் பொது மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications