ஜவுளி, சர்க்கரை மீது 'வாட்' வரி மறுபரிசீலனை - மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

இதுதொடர்பாக டெல்லியில் நடந்த மாநாட்டில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில நிதி மற்றும் வரிவிதிப்புத் துறை அமைச்சர்கள் அடங்கிய அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இதில், தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், "தற்போது ஜவுளித்துறை மோசமான சூழ்நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் இந்த துறைக்கு உகந்த சூழ்நிலையும் இல்லை. தமிழகத்தில் முக்கிய தொழிலாக விளங்கும் ஜவுளித் துறை, லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. மாநில பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கடந்த ஜுலை 12-ந் தேதி ஜவுளி மீது தமிழக அரசு 5 சதவீத வாட் வரி விதித்தது. ஜவுளித் தொழிலின் பல்வேறு பிரிவுகளில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, இந்த வரி விதிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த முடிவு எடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஜவுளி மீது வாட் வரி விதிப்பது பற்றி மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது முறையானதாக இருக்காது. ஜவுளித் தொழிலின் நிலைமை இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜவுளி மீது வாட் வரி விதிப்பதை ஏற்கும் நிலையில் தமிழ்நாடு இல்லை.
மறுபரிசீலனை செய்யுங்கள்
எங்களது கருத்துகளை மனதில் கொண்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜவுளி மீது வாட் வரி விதிப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல சர்க்கரை மீதான் வாட் வரி விதிப்பு முடிவையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் இந்தக் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications