புதிய அணைக்கு ஆதரவு கோரி கேரளா காங். தலைவர் ஜெ. கருணாநிதிக்கு கடிதம்

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
116 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றி வசிக்கும் 30 லட்சம் மக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிய அணை கட்ட வேண்டியுள்ளது. கேரள அரசின் இந்தக் கோரிக்கைக்கு தாங்கள் ஆதரவு தர வேண்டும்.
கேரளம் புதிய அணையைக் கட்டினால் தமிழகத்தின் பாசனத்துக்கு போதிய தண்ணீர் தராது என்று தமிழகம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
அனைத்து தலைவர்களுக்கும் கடிதம்
இதேபோல முல்லைப் பெரியாறு புதிய அணை கட்ட ஆதரவு கோரி திமுக தலைவர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக தலைவர் நிதின் கட்கரி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கும் சென்னிதாலா கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications