ஹெலிகாப்டர் மூலம் சென்னை மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்த்த ஜெ.
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார்.
சமீபத்திய தொர் மழையால் சென்னை நகரம் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. பல புறநகர்ப் பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அடையாறு ஐ.என்.எஸ். தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் தலைமை செயலாளர் சாரங்கி, மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர்.












Click it and Unblock the Notifications