பத்மநாபசுவாமி கோவிலில் அதிநவீன கண்காணிப்பு கேமரா - சாண்டி தொடங்கி வைத்தார்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 58 அதி நவீன கண்காணிப்பு கேமராக்களை முதல்வர் உம்மன் சண்டி தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 பாதாள ரகசிய அறைகளில் 5 அறைகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி திறக்கப்பட்டன. அதில் பல லட்சம் கோடி மதிப்பாலான தங்கம், வைரம், வெள்ளியான நகைகள், பொக்கிஷங்கள் வெளியே எடுக்கப்பட்டன.
பாதுகாப்பு பலப்படுத்தல்
பத்மநாபசாமி கோவிலில் பாதாள நிலவறைகளில் இருந்து பழங்கால பொக்கிஷங்கள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவிலுக்கு கோவிலில் பாதுகாப்பு பணிக்காக நவீன முறையை கையாள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நவீன கண்காணிப்பு கேமராக்கள், வெப் கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
58 அதிநவீன கேமராக்கள்
கோவிலின் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், மற்றும் 4 நுழைவு வாயில்கள், பத்மதீர்த்தகரை, சுற்று மதில் ஆகிய இடங்களில் 58 இன்ட்ரா நெட் என்ற அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களின் கண்காணிப்பு செயல்பாட்டு பணியை முதல்வர் உம்மன்சாண்டி இன்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications