தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பெரியாறு பிரச்சினையைக் கொண்டு போன கேரள எம்.பிக்கள்
டெல்லி: கேரள எம்.பிக்களின் அழுத்தம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை முழு பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை இடிந்து விடும், லட்சக்கணக்கான மக்கள் செத்துப் போய் விடுவார்கள் என்று தேவையில்லாமல் பீதியூட்டி, பயமுறுத்தும் வகையில் செயல்பட்டு வரும் கேரளத் தரப்பு அணையை இடிக்க தற்போது அனைத்து வழிகளிலும் ஆதரவு திரட்டி வருகிறது. எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் புகுந்து குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை முழு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நேரில் சென்று கேரள எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் நெருக்குதலைத் தொடர்ந்து தற்போது முழு பெஞ்ச் விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.