சென்னை மாநகராட்சி ஆணையராக பிடபிள்யூசி டேவிதார் நியமனம்- மதுரையை மாற்றியவர்!

தமிழ்நாடு சிமென்ட் நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்து வந்த டேவிதார் தற்போது சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில்தான் அப்பதவியில் இருந்து வந்த டி.கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
புதிய பொறுப்புக்கு வந்துள்ள டேவிதார், கடந்த பல வருடங்களாகவே ஆக்டிவான பொறுப்பில் இல்லாத நிலை காணப்பட்டது. தற்போதுதான் அவர் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கக் கூடிய முக்கியப் பொறுப்புக்கு வந்துள்ளார்.
டேவிதார் படு சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர். முன்பு மதுரை மாநகராட்சியின் ஆணையராக இருந்தபோது அதிரடியாக செயல்பட்டு நகரின் முகத்தையே மாற்றியவர். ஆக்கிரமிப்புகள் அகற்றியது, புதர்கள் மண்டிப் போய்க் கிடந்த கிருதுமால் நதியை மீட்டெடுத்தது உள்ளிட்ட பல முக்கியப் பணிகளை மதுரையில் செய்து மதுரை நகரை புதுப் பொலிவுக்குக் கொண்டுவந்தவர் டேவிதார். இன்றும் கூட மதுரையில் டேவிதாரின் பணிகளைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.
தற்போது சென்னை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள டேவிதார் மூலம் சென்னை மாநகரம் பெரும் பலன் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நியமனம் குறித்து டேவிதார் கூறுகையில், முதல்வர் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பெரும் பணியைக் கொடுத்துள்ளார். இந்தியாவின் மிக முக்கிய நகரம் ஒன்றின் ஆணையராக பணியாற்றுவது என்பது பெருமைக்குரியது. எனது பணிகளை திறம்பட செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications