ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்தனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பேராசிரியர் அம்பலத்தரசு தலைமையிலான பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிகட்டு விழா குழுவினர் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு காளைகளுடன் வந்து மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல ஆண்டுகளாக தெடார்ந்து நடந்து வருகின்றது. இதனை தடை செய்ய கோரி விலங்குகள் நலவாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சில நிபந்தனைகளுடன் விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையேற்று ஜல்லிக்கட்டு விளையாட்டு நடந்து வருகின்றது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யும்படி, நடிகை ஹேமமாலினி மத்திய அரசிடம் கோரி விடுத்தார். அதனை தொடர்ந்து மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விலங்குகள் நலவாரிய சட்டத்தை விரிவுபடுத்தி, ஜல்லிக்கட்டு காளையை காட்சிப் பொருளாக வேடிக்கை காட்டக் கூடாது என்று தடை உத்தரவிட்டுள்ளார்.
இந்த முடிவு எடுக்கும் போது எம்.பி.க்களையோ, எங்களை போன்ற குழுவினரிடமோ எந்த கருத்தும் கேட்கவில்லை. தன்னிச்சையாக விளையாட்டுக்கு தடை விதித்துள்ளார். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும். எனவே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications