பவாரை அறைந்தவரின் மனநல மருத்துவமனை வாசம் 12ம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லி: மத்திய அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்த வாலிபரை வரும் 12ம் தேதி வரை மனநிலை மருத்துவமனையி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்த ஹர்விந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஹர்விந்தர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஹர்விந்தர் சிங்கிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹர்விந்தர் சிங் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் முன்னர் அளித்துள்ள தீர்ப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கொலை குற்றம் செய்தால் கூட குற்றவாளியாக கருதப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஹர்விந்தர் சிங்கை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த மனுவை நிரகரித்த நீதிமன்றம் ஹர்விந்தர் சிங்கை வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. மேலும் கடந்த 2ம் தேதி ஹர்விந்தர் சிங் டெல்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் மனநல மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வரும் ஹர்விந்தர் சிங்கிற்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. இதற்காக அவரது சிகிச்சை காலம் வரும் 12ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹர்விந்தர் சிங்கின் மருத்துவ அறிக்கையை ரகசியமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை சூப்பிரண்டுக்கு நீதிபதி ஜஸ்ஜித் கௌர் உத்தரவிட்டுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications