பவாரை அறைந்தவரின் மனநல மருத்துவமனை வாசம் 12ம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லி: மத்திய அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்த வாலிபரை வரும் 12ம் தேதி வரை மனநிலை மருத்துவமனையி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்த ஹர்விந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஹர்விந்தர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஹர்விந்தர் சிங்கிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹர்விந்தர் சிங் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் முன்னர் அளித்துள்ள தீர்ப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கொலை குற்றம் செய்தால் கூட குற்றவாளியாக கருதப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஹர்விந்தர் சிங்கை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த மனுவை நிரகரித்த நீதிமன்றம் ஹர்விந்தர் சிங்கை வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. மேலும் கடந்த 2ம் தேதி ஹர்விந்தர் சிங் டெல்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் மனநல மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வரும் ஹர்விந்தர் சிங்கிற்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. இதற்காக அவரது சிகிச்சை காலம் வரும் 12ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹர்விந்தர் சிங்கின் மருத்துவ அறிக்கையை ரகசியமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை சூப்பிரண்டுக்கு நீதிபதி ஜஸ்ஜித் கௌர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications