கேரளாவைக் கண்டித்த நாளை வைகோ நடைபயணம்- 8ம் தேதி கூடலூரில் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

Vaiko
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை மதுரையிலிருந்து கூடலூர் நோக்கி நடைபயணத்தைத் தொடங்குகிறார். 8ம் தேதி கூடலூரில் அவர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வைகோ ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு வகையான போராட்டங்களையும் அவர் நடத்தியுள்ளார்.நேற்று கூட அவர் பிரதமரை நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு விவகாரம் தொடபாக மிக நீண்ட கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தை வலியுறுத்தி விட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நாளை அவர் நடைபயணம் ஒன்றை தொடங்குகிறார். நாளை காலை மதுரையிலிருந்து கூடலூர் நோக்கி நடைபயணமாக கிளம்புகிறார். அவருடன் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொள்கின்றனர்.

மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திலிருந்து நடைபயணம் கிளம்புகிறது. கூடலூரை சென்றடைகிறது. அங்கு 8ம் தேதி வைகோ உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறார். அவருடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+