இங்கிலாந்தில் முன்னாள் காதலனை கூலிப்படை வைத்துக் கொன்ற இந்திய மாணவி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற முன்னாள் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள கென்ட் பகுதியைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முண்டில் மாஹில் (20). மருத்துவக் கல்லூரி மாணவி. அவரது முன்னாள் காதலர் சிக் டிவி உரிமையாளர் ககன்தீப் சிங் (21). ககன்தீப் சிங் முண்டிலிடம் தகாத முறையில் நடக்க முயன்றதை அடுத்து அவர்கள் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிந்தனர்.

தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற ககன்தீப்பை பழிவாங்க நினைத்தார் முண்டில். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் ககன்தீப்புக்கு எஸ்எம்எஸ் மேல் எஸ்எம்எஸ் அனுப்பி தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி ககன்தீப்பும் வந்துள்ளார். இதற்கிடையே முண்டில் கூலிப்படையாட்கள் இருவரை தனது அறையில் மறைத்து வைத்துள்ளார்.

ககன்தீப் வந்ததும் கூலிப்படையினர் அவரைத் தாக்கியதில் மயக்கம் அடைந்தார். மயக்கம் அடையும் முன்பு அவர் தன்னைக் காப்பாற்றுமாறு முண்டிலைக் கெஞ்சியுள்ளார். மயங்கிய ககன்தீப்பை அவர் வந்த மெர்சிடீஸ் கார் டிக்கியில் போட்டு ஆள்நடமாட்டம் இல்லாத பிளாக்ஹீத்தில் உள்ள ஒரு தெருவுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

பிரேத பரிசோதனையில் ககன்தீப் உடலில் தீப்பிடிக்கும் முன்பு அவர் உயிருடன் இருந்தார் என்று தெரிய வந்தது. ஆனால் முண்டிலும், 20 வயதாகும் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரும் இந்த குற்றத்தை மறுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+