முல்லைப் பெரியாறு விவகாரம்: நாளை அவசரமாகக் கூடும் திமுக செயற்குழு
சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. அதை தடுத்து நிறுத்த கேரள அரசும் சரி, மத்திய அரசும் சரி முன்வரவில்லை. இந்நிலைமை தொடர்ந்தால் இது குறித்து திமுக செய்ற்குழு கூடி முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி நேற்று முன்தினம் பேட்டியளித்தபோது கூறினார்.
இந்நிலையில் திமுக செயற்குழு நாளை அவசரமாக கூடுகிறது என்று கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது. எனவே, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications