Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக்கப்பட்ட சிவனாண்டி

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருச்சி அரசு போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த சிவனாண்டி, நெல்லை அரசு போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார்.

இது குறித்து அரசு உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த டி.ஐ.ஜி. பாரி, திருச்சி அரசு போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல திருச்சி அரசு போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த சிவனாண்டி, நெல்லை அரசு போக்குவரத்து கழக விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மிக முக்கிய பதவிகள் சிவனாண்டிக்குக் கிடைப்பது வழக்கம். ஆனால், இந்தமுறை அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை சரக டி.ஐ.ஜியாக சத்தியமூர்த்தி பொறுப்பேற்பு

இந் நிலையில் மதுரை சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட க.ந.சத்தியமூர்த்தி நேற்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக சந்தீப் மிட்டல் இருந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டார். இதனால் மதுரை டி.ஐ.ஜி பணியிடம் காலியாக இருந்தது. இதனையடுத்து திண்டுக்கல் டி.ஐ.ஜி.யாக இருந்த சஞ்சய்மாத்தூர் மதுரை சரகத்தை கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்த நிலையில் மதுரை சரக புதிய டி.ஐ.ஜி.யாக க.ந.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார். அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இவர் மதுரை டி.ஐ.ஜியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழக உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை சரகடி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் நிருபர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின்படி, பொதுமக்களின் நலன் காக்கப்படும். மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்து 2 மாவட்ட எஸ்.பிக்களிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

4 வழிச்சாலைகளில் வாகன விதிமுறை மீறல்களால் விபத்துக்கள் நடைபெறுவதால் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவாதவூர் அருகே ஓடும் பஸ்சில் கண்பி்டிக்கப்பட்ட வெடிகுண்டு வழக்கில் விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+