முல்லைப் பெரியாறு விவகாரம்: போராவூரணியில் ஆர்ப்பாட்டம்- மலையாளிகள் கடைகள் அடைப்பு
தஞ்சை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள மலையாளிகளின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
முல்லைப் பெரியாறு அணையை இடித்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காமல் இருக்க திட்டமிடும் மலையாளிகளின் போக்கை கண்டித்தும், கேரளதக்தில் தமிழர்கள் மற்றும் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மலையாளிகளின் கடைகளை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக போலீசாரைக் கண்டித்தும் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திருவேங்கடம் ஆகியோர் பேசியதாவது,
மலையாளிகள் தமிழகர்களைத் தாக்கினால் வழக்கு போடுவதில்லை. ஆனால் தமிழர்கள் மலையாளிகளின் கடைகளைத் தாக்க முயன்றாலே ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு போடுவது நியாயமா? தமிழன் அடிவாங்கிக் கொண்டே இருந்தால் அடிமையாகத் தான் போக வேண்டும்.
சென்னை, தஞ்சை, கும்பகோணம், கோவை போன்ற பகுதிதிகளில் உள்ள மலையாளிகளின் கடைகளைத் தாக்கியவர்களையும், முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக துண்டறிக்கை கொடுத்து கைதானவர்களையும் தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதை அறிந்த மலையாளிகளின் கடைகள், முத்தூட் பைனான்ஸ் போன்றவை அடைக்கப்பட்டிருந்தன.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications