முல்லைப் பெரியாறு விவகாரம்: போராவூரணியில் ஆர்ப்பாட்டம்- மலையாளிகள் கடைகள் அடைப்பு
தஞ்சை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள மலையாளிகளின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
முல்லைப் பெரியாறு அணையை இடித்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காமல் இருக்க திட்டமிடும் மலையாளிகளின் போக்கை கண்டித்தும், கேரளதக்தில் தமிழர்கள் மற்றும் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மலையாளிகளின் கடைகளை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக போலீசாரைக் கண்டித்தும் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திருவேங்கடம் ஆகியோர் பேசியதாவது,
மலையாளிகள் தமிழகர்களைத் தாக்கினால் வழக்கு போடுவதில்லை. ஆனால் தமிழர்கள் மலையாளிகளின் கடைகளைத் தாக்க முயன்றாலே ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு போடுவது நியாயமா? தமிழன் அடிவாங்கிக் கொண்டே இருந்தால் அடிமையாகத் தான் போக வேண்டும்.
சென்னை, தஞ்சை, கும்பகோணம், கோவை போன்ற பகுதிதிகளில் உள்ள மலையாளிகளின் கடைகளைத் தாக்கியவர்களையும், முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக துண்டறிக்கை கொடுத்து கைதானவர்களையும் தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதை அறிந்த மலையாளிகளின் கடைகள், முத்தூட் பைனான்ஸ் போன்றவை அடைக்கப்பட்டிருந்தன.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications