For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணையை நோக்கி பல்லாயிரம் பேருடன் 16ம் தேதி நடைபயணம்-திருமா.

Google Oneindia Tamil News

Thirumavalavan
சென்னை: முல்லைப் பெரியாறு அணையை நோக்கி பல ஆயிரம் பேருடன் வருகிற 16ம் தேதி தேனியிலிருந்து நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டப் போவதாக கேரள அரசு பிடிவாதமாக கூறி வருவது கண்டனத்துக்குரியது. இந்த அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும் பஞ்சம் ஏற்படும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருவது கடும் வருத்தத்திற்குரியது.

முல்லைப் பெரியாறு அணையை மீட்க அணை மீட்பு நடைப் பயணம் மேற்கொள்ளப்படும். 16ம் தேதி தேனியிலிருந்து தொடங்கும் இந்தப் போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி செல்வோம் என்றார் அவர்.

English summary
VCK to hold padhayathra to Mullaiperiyar dam on Dec 16, said party leader Thirumavalavan. He condemned the centre and Kerala state for their attitude towards Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X