மணிப்பூர் தலைநகர் இம்பாலில் குண்டு வெடிப்பு: 6 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூர் தலைநகரம் இம்பாலில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு இன்று மதியம் 1.35 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்ததால் அங்கு பதற்றம் எழுந்துள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 30ம் தேதி இங்குள்ள மார்க்கெட் பகுதியில் குண்டு வெடித்தது . அந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications