முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக, கேரள மக்கள் அமைதி காக்க வேண்டும்-மன்மோகன்
டெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்படும் வரை தமிழக, கேரள மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் குழு நேற்று பிரதமரைச் சந்தித்து முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. பின்னர் கோரிக்கை மனுவையும் அவர்கள் கொடுத்தனர்.
அப்போது அவர்களிடம் பிரதமர் பேசுகையில்,தமிழ்நாடு, கேரளத்தில் நடைபெற்று வன்முறைச் சம்பவங்களால் மிகவும் கவலையுற்றிருக்கிறேன்.
இந்தப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் வரை இரு மாநில அரசியல் தலைவர்களும், மக்களும் அமைதி காக்க வேண்டும்.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. என்எஸ்வி சித்தன் கூறுகையில்,முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையால் இரு மாநில எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை பிரதமரிடம் எடுத்துரைத்தோம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications