மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: 2ஜி ஊழலில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதாக கூறி, அவரை பதவி விலக வலியுறுத்தி தூத்துக்குடியில் பாஜக சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
2ஜி ஊழலில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதாகவும், ஊழலில் தொடர்புடைய அவர் உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு மாவட்ட இளைஞரணி தலைவர் மான்சிங் தலைமையில் மறியல் பேராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 37 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்ட்டனர்.












Click it and Unblock the Notifications