For Quick Alerts
For Daily Alerts
Just In
பாலக்காடு அருகே தமிழக பேருந்து மீது தாக்குதல் – நான்கு பேர் காயம்
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே தமிழ்நாடு அரசு பேருந்து மீது மலையாளிகள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த நான்கு பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் பாலக்காட்டிலிருந்து கோவையை நோக்கி தமிழக அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. சுருளிமடை என்கிற இடத்தில் பேருந்து வந்தபோது அங்கு காத்திருந்த அடையாளம் தெரியாத 4 பேர் பேருந்தை திடீரென்று வழிமறித்து சரமாரியாகக் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். அவர்களை காரில் வந்த சிலர் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
English summary
A TamilNadu State Transport Passenger bus Of kovai depot attacked near Palakadu, by the protesters of Mullaperiyar issue.
Story first published: Saturday, December 17, 2011, 15:04 [IST]