சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி இடங்களை நிரப்புவதற்கு 7 பேர் அடங்கிய பட்டியலை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. அந்த 7 பேரில் உச்சநீதிமன்றம் 4 பேரை தேர்ந்தெடுத்து மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தது.
பின்னர் அந்த பட்டியல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த 4 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக, உயர்நீதிமன்ற பதிவாளர் எஸ்.விமலா, சென்னை முதன்மை செசன்சு நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ், சிறு வழக்குகள் நீதிமன்ற முதன்மை நீதிபதி கருப்பையா, வழக்கறிஞர் ரவிச்சந்திரபாபு உள்ளிட்ட 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 4 பேருக்கான பணி நியமன உத்தரவு இன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வரும் 19ம் தேதி 4 பேரும் பதவி ஏற்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications