ரூ.50,000 லஞ்சம் வாங்கிய தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கைது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ரூ.50,000 லஞ்சம் வாங்கிய தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி.யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டுடன்காட்டை சேர்ந்தவர் அரிபாலகிருஷ்ணன். இதே ஊரை சேர்ந்த சுதிகரன் என்பவரது தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சுதிகரன் அவரது அண்ணன் கிருபாகரன் இடையே நிலத்தகராறு இருந்தது.

இந்த நிலையில் காவலாளி அரிபாலகிருஷ்ணனை ஜாதியை செல்லி திட்டியதாக கிருபாகரன் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரூரல் டி.எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். தனக்கு ரூ.3 லட்சம் தந்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக கிருபாகரனிடம் டி.எஸ்.பி கூறியுள்ளார்.

டி.எஸ்.பிக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருபாகரன், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.கண்ணனிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவரையின்படி, ரூ.50,000 டிஎஸ்பி ஜெயக்குமாரிடம் கிருபாகரன் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. ஜெயக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஆனால் அவர் லஞ்சப் பணத்தை ஜன்னல் வழியாக வீசினார். இது குறித்து டிஎஸ்பி ஜெயக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+