வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியான கிம் ஜோங் மரணம்: உடனே அதிபரானார் மகன்

இதையடுத்து அவரது மகன் கிம் ஜோங்-உன் அதிபர் பதவிக்கு வந்துள்ளதாக அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வட கொரியா பிரிக்கப்பட்டு தனி நாடு ஆனது முதல், அந்த நாட்டை கிம் ஜோங்கின் தந்தையான கிம்-2-சுங் தான் ஆண்டார். அவர் 1994ம் ஆண்டு மரணடைந்ததையடுத்து அவரது மகன் பதவிக்கு வந்தார். இப்போது 3வது தலைமுறையைச் சேர்ந்த கிம் ஜோங்-உன் பதவிக்கு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு முதலே கிம் ஜோங்-உன் தலைமை பதவிக்காக தயார்படுத்தப்பட்டு வந்தார். அவருக்கு மிக முக்கிய ராணுவ, உள்துறை பதவிகள் தரப்பட்டிருந்தன. இந் நிலையில் இப்போது அவரே அதிபராகிவிட்டார்.
இது குறித்து அந் நாட்டு தொலைக்காட்சி வெளியிட்ட அறிவிப்பில், ராணுவத்தின் தயார் நிலையை அறிய தீவிரமான நேரடி பணிகளில் ஈடுபட்டிருந்த கிங் ஜோங், மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான உழைப்பு காரணமாக, ரயில் பயணத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு முதலே அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் நடமாடவே முடியாத நிலையில் உள்ளதாக அமெரிக்கா புரளியைப் பரப்பியது. ஆனாலும் அவர் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டு இந்த புரளியை பொய்யாக்கினார்.
இவரது மறைவையடுத்து வட கொரியா தனது படைகளை தயார் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து தென் கொரியாவும் படைகளை தயார்படுத்தி வருகிறது.
வட கொரியா, தென் கொரியா இடையே நடந்த போரில் லட்சக்கணக்கானவர்கள் பலியாயினர். இப்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் தாற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தென் கொரியாவுக்கு பாதுகாப்பு அளிக்க அங்கு அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வட கொரியாவுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆயுத உதவிகள் அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications