கேரளாவில் கல்லடி; தமிழகத்தில் தடியடி: ஐயப்ப பக்தர்களின் அவல நிலை
செங்கோட்டை: கேரளாவில் மலையாள ரவுடிகளிடம் அடிபட்டு திரும்பிய தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது செங்கோட்டை அருகே தமிழக போலீசார் அறிவிப்பின்றி தடியடி நடத்தியதால் பதற்றம் உருவானது.
முல்லை பெரியாறு அணை பிரச்சனையால் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் தாக்கப்படுவதோடு பக்தர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்திலிருந்து கேரளாவுக்கு அரிசி மூடை ஏற்றி சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
லாரியை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றார். புனலூரை அடுத்து கொன்னிகொடு பகுதியில் சென்றபோது அங்கு ஆயுதங்களுடன் வந்த கேரளத்தவர்கள் சிலர் லாரியின் கண்ணாடியை உடைத்தனர். அவரையும் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
ரவுடிகள் தாக்குதல்
இதை தொடர்ந்து செங்கோட்டையிலிருந்து காய்கறி ஏற்றி சென்ற லாரிகளும் தாக்கப்பட்டன. இதனால் பிரனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கும்பகோணம் பகுதியிலிருந்து சபரி்மலைக்கு சென்ற கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் 2 வேன்களும் சேதப்படுத்தப்பட்டன. டிரைவர்களையும் கேரளக்காரர்கள் தாக்கினர். இதனால் காயமடைந்த தமிழக ஐயப்ப பக்தர்கள் மீண்டும் தமிழக எல்லை பகுதியான பிரனூருக்கு வந்தனர்.
போலீஸ் தடியடி
இதற்கிடையே புனலூர் பகுதியில் வெள்ளிமலை பகுதியில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரை கேரளத்தவர்கள் அரிவாளால் வெட்டியதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அந்த வழியாக சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை பாதிக்கப்பட்டவர்கள் நிறுத்தி செல்ல வேண்டாம் என்று தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மீது தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அங்கேயம் அடிக்கிறார்கள், தமிழகத்திலும் போலீஸார் அடிக்கிறார்கள், நாங்கள் எங்கே போவது, ஏன் இந்த அவல நிலை என்று பல ஐயப்ப பக்தர்கள் புலம்பியதைப் பார்த்தபோது மிகப் பரிதாபமாக இருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications