வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எச்டிஎப்சி, யெஸ் பேங்க்

Subscribe to Oneindia Tamil

HDFC Bank Logo
டெல்லி: தனியார் வங்கிகளான எச்டிஎப்சி மற்றும் எஸ் பேங்க் ஆகியவை, வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRIs) முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட 3 மடங்கு உயர்த்தியுள்ளன.

யெஸ் பேங்க் 3.82 சதவீதமாக இருந்த இந்த வட்டி விகிதத்தை 9.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. எச்டிஎப்சி வங்கியும் இந்த வட்டி விகிதத்தை 3.82 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

ரூபாயின் மதிப்பு சரிந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து முதலீடுகள் வெளியே போய்க் கொண்டுள்ளன. இந் நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இந்தியர்களின் முதலீடுகளுக்கு வட்டி விகிதத்தை பெருமளவு உயர்த்தியுள்ளன இந்த வங்கிகள்.

யெஸ் பேங்கில் 15 மாதங்கள் 15 நாட்களுக்கான பிக்ஸட் டெபாசிட்களுக்கு இந்த வட்டி விகிதம் பொறுந்தும். இந்த வங்கி தனது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தையும் 200 புள்ளிகள் வரை உயர்த்தி, அதை 6 சதவீதமாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை வங்கிகளே முடிவு செய்து கொள்ளும் வகையில், கடந்த வாரம் தான் ரிசர்வ் வங்கி தனது விதிகளைத் தளர்த்தியது.
இந்தியாவுக்குள் அதிக டாலர்களைக் கொண்டு வரும் திட்டத்தோடு இந்த விதிகள் தளர்த்தப்பட்டன.

இதையடுத்து நேற்று எச்டிஎப்சி வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. இன்று யெஸ் பேங்க் உயர்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+