மதுரை அதிமுக எம்எல்ஏ தமிழரசன் மீது நில அபகரிப்பு புகார்
மதுரை:மதுரை கிழக்கு அதிமுக எம்எல்ஏவான தமிழரன் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கிழக்கு அதிமுக எம்எல்ஏ தமிழரசன். மேலூரில் இவருக்கு சொந்தமான வீடு மற்றும் கடைகள் உள்ளன. எம்எல்ஏ தமிழரசன் வீட்டிற்கு அருகே வசிக்கும் பாண்டியம்மாள் என்பவரின் வீடும், கடையும் உள்ளது. அவர் தமிழரன் மீது நில அபகரிப்பு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.
அந்த புகாரில் தனது வீட்டையும், கடையையும் காலி செய்யக் கோரி, கடந்த ஒரு ஆண்டு காலமாக அதிமுக எம்எல்ஏ தமிழரசன் தன்னை மிரட்டி வருவதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் எம்எல்ஏ ஆன பிறகு தனது கடையையும், வீட்டையும் மறைக்கும் விதமாக தனது இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த இடம் அவருக்கு சொந்தமானது என்றும் மிரட்டி வருவதாக மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் பாண்டியம்மாள் புகார் செய்துள்ளார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு மதுரை எஸ்.பி.அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுரை அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications