தந்தை பெரியார் 38வது நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
பகுத்தறிவுத் தந்தை என்று புகழப்படும் பெரியார் ஈவெ ராமசாமி மறைந்து இன்றோடு 38 ஆண்டுகள் ஆகின்றன.
இதனையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முத்துராமலிங் கம், சற்குணபாண்டியன், மாவட்ட செயலாளர்கள், ஜெ.அன்பழகன், ஆர்.டி. சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ரகுமான்கான், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், இளபுகழேந்தி, திருவல்லிக்கேணி உசேன், பாண்டி செல்வம், பகுதி செயலாளர் மதன், ஏழுமலை, உள்பட ஏராளமான தி.மு.க. வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மணியம்மை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்யடின், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி, திராவிடர் கழக பொதுச் செயலாளர்கள் கலிபூங்குன்றன், அறிவுக்கரசு, துணை பொதுச் செயலாளர்கள் பிறைநுதல் செல்வி, இரா. குணசேகரன், துரை சந்திரசேகரன், பொருளாளர் சாமிதுரை, அன்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.