எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்த வராத சசியின் ஆதரவு அமைச்சர் செந்தில் பாலாஜி தூக்கப்படுவாரா?-

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 24ம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் வெங்கமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒவ்வாரு வருடமும், கரூர் மாவட்ட செயலாளராக உள்ளவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.
ஆனால் நேற்று குளித்தலை எம்.எல்.ஏ. பாப்பாசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கரூர் நகர் மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரும், தமிழக போக்குவரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து கட்சியினரிடம் விசாரித்தபோது, அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ளதாகக் கூறினர்.
சசிகலாவுக்கு மிக மிக நெருக்கமான வட்டத்துக்குள் இருப்பவர் செந்தில் பாலாஜி. தீவிர சசிகலா ஆதரவாளர். இதை பயன்படுத்தித்தான் தனது அமைச்சர் பணிகளைக் கூட செந்தில் பாலாஜி முறையாக செய்யாமல் டேக்கா கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது சசிகலாவுக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டதால் செந்தில் பாலாஜியின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
அவர் சென்னைக்கு எதற்காக வரவழைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. இருப்பினும் கணக்கு வழக்கு தொடர்பான விசாரணையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் விரைவில் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்படுவது உறுதி என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications