Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசிரியர் கலந்தாய்வு: உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கல்வித்துறை மீது புகார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வேலூர் தொடக்கப்பள்ளி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ. சரவணன் கூறியதாவது,

தமிழக அரசின் உத்தரவின்படி நடப்பாண்டில் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்கனவே பல ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்களின் சீனியாரிட்டி மிகவும் பாதிக்கப்படுகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பத்தூரைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் தடை உத்தரவு பெற்றனர். இதனால் கடந்த 21ம் தேதி வேலூரில் நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பதவி உயர்வுப் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பாதிக்கப்பட்ட 8 ஆசிரியர்கள் இன்றி கலந்தாய்வு நடத்தி 19 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளனர். இதற்கான சான்றிதழை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜமாணிக்கமே வழங்கியுள்ளார் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+