பள்ளத்தின் வேன் கவிழ்ந்து 21 ஐயப்ப பக்தர்கள் காயம்
கொல்லம்: சபரிமலையில் தரிசனம் முடிந்து திரும்பிய திருச்சி ஐயப்ப பக்தர்களின் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் காயம் அடைந்தனர். இவர்களின் 3 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளது.
திருச்சியிலிருந்து 21 பேர் அடங்கிய குழுவினர் சனிக்கிழமையன்று வேனில் சபரிமலை வந்தனர். தரிசனம் முடித்து விட்டு ஞாயிறுக்கிழமை காலை சபரிமலையில் இருந்து புறப்பட்ட அவர்களின் வேன் காலை 11 மணி அளவில் எரிமேலி அருகே கனமழை பகுதியில் ஒரு வளைவில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேனில் இருந்த ஸ்ரீராமன், ரவீந்திரன், ஈஸ்வரன், வெங்கடேஷ், சங்கர், மாரிமுத்து, சுரேஷ், ரமேஷ், மணிமாறன், சரவணன், முத்துகுமார், உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த 11 பேர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications