பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட குவிந்த தொண்டர்கள்- திணறிய காரைக்குடி-1000 பேர் கைது
காரைக்குடி: காரைக்குடியில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் 1000 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமரின் செயல்பாடுகளைக் கண்டித்து மதிமுக, தேமுதிக, இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி, தமுமுக உள்ளிட்ட பல கட்சிகளும் இன்று கருப்புக் கொடி போராட்டத்தை காரைக்குடியில் நடத்துவதாக அறிவித்திருந்தன.
சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை போராட்டத்திற்காக புறப்பட்டவுடனேயே மடக்கி கைது செய்து கொண்டு சென்று விட்டனர். தேமுதிகவினரையும் அவர்கள் ஆங்காங்கே மடக்கிப் பிடித்தனர்.
இந்த நிலையில் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்ட காரைக்குடியில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 300 பேர் திரண்டிருந்தனர். தடையை மீறி கருப்புக் கொடி காட்ட முயன்ற அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மதிமுகவினர் பேரணி
இதேபோல மதிமுக சார்பில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மதிமுகவினர் இன்று காரைக்குடியில் பேரணி நடத்தினர்.
ஐந்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்ட செயலாளர்களுடன் மதிமுகவினர் தேவர் சிலையிலிருந்து பேரணியாக கிளம்பினர். ஆனால் அவர்களை பெரியார் சிலை அருகேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
அதேபோல தேமுதிகவினர், விவசாய அமைப்புகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்திக் கைதாகினர்.
பெரும் பரபரப்பு
பல்வேறும் கட்சிகளின் தொணட்ர்களும் காரைக்குடியில் குவிந்ததால், அந்த நகரமே பரபரப்பாக காணப்பட்டது. தென் மண்டல காவல்துறை ஐஜி ராஜேஷ் ஸ் தலைமையில், 4000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தால் மன்மோகன் சிங் பயணத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்ற போதிலும், சென்னையிலும், காரைக்குடியிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இன்று பரபரப்பாக நடந்த பல்வேறு போராட்டங்கள் நிச்சயம் பிரதமரின் காதுகளுக்குச் சென்றிருக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications