For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகல ரயில்பாதை பணியை துவக்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் நாளை கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

திருததுறைப்பூண்டி: திருவாரூர்- காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில்பாதை பணியை துவக்கக் கோரி திருத்துறைப்பூண்டியில் நாளை (27ம் தேதி) கடையடைப்பு போராட்டம் நடக்கின்றது.

திருவாரூர்- காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி ஆகிய ரயில்பாதைகள் அகல பாதைகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆகியும் இன்னும் அகல ரயில்பாதை பணிகள் துவக்கப்படவில்லை. இதை கண்டித்தும், விரைவில் அகல ரயில்பாதை பணிகளை துவக்க வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் சங்கம், சர்வ கட்சி அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் நாளை (27ம் தேதி) கடையடைப்பு மற்றும் தலைமை அஞ்சலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருத்துறைப்பூண்டி வழ்கறிஞர்கள் நாளை (27ம் தேதி) நீதிமன்றத்தை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.

English summary
Thiruthuraipoondi merchants, political parties and other groups have called for a bandh tomorrow seeking the government to start broad gauge works there. Thriuthuraipoondi lawyers are boycotting the court and will protest supporting the same cause.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X