சென்னையில் அறுந்து கிடந்த வயரை மிதித்து ஒருவர் பலி- மின் தடை அமல்; பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தானே புயலையொட்டி சென்னை உள்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களான கடலூர், நாகை, திருவாரூர். விழுப்புரம், கடலூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
அதே போல காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒருவர் பலி:
கனமழை காரணமாக சென்னையில் அறுந்து விழுந்த மின்வயரை மிதித்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். இதனையடுத்து தானே புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 4 ஆக அதிகரித்துள்ளது.
மின் தடை அமல்:
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடையை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரம் காரணமாக விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications