டாஸ்மாக் ஊழியர்களுக்கு பொது டிரான்ஸ்பர்: கணக்கெடுப்பு துவக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பொது இட மாறுதல் முறையில் டிரான்ஸ்பர் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதற்கான கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு நவம்பரில் அரசு கட்டுபாட்டின்கீழ் 6,500 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இக்கடைகளில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என 25,000 பேர் நியமிக்கப்பட்டனர்.

இந்த கடைகளின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,000 கோடி அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.1500 முதல் ரூ.2 ,000 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரித்து வருவதால் உயர்ரக மதுபான கடைகளான எலைட் ஷாப் திறக்கவும் அரசு முடிவு செய்தது.

இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும் பட்சத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே கடந்த 8 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் சிலர் செய்யும் தவறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதும நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில் இது வரை ஒரு சில தவறுகளுக்காகவும், குடும்ப சூழ்நிலைக்காக மாறுதல் கேட்டவர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் இட மாறுதல் கொடுத்து வந்தது.

ஆனால் டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை முற்றுலுமாக களையும விதமாக பொது இடமாறுதல் செய்ய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை, கடைகளின் விற்பனை நிலவரம் குறித்து கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+