முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவுக்கு நெஞ்சு வலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: முன்னாள் சட்டசபை சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. காலப்போக்கில் இவர் அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து விலகி திமுகவில் போய்ச்சேர்ந்து கொண்டார். தற்போதும் அங்குதான் இருக்கிறார்.
மதுரை திருமங்கலத்தில் இவர் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications