பெங்களூரில் 1,275 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு: பின்னணியில் அரசு உயர் அதிகாரிகள்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் பெருநகர வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 1,275 ஏக்கர் நிலம் அதுவும் நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள இடம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நில ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மற்றும் பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பெங்களூர் பெருநகர வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமாக பெங்களூரின் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார 1,275 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவர் கூறுகையில், பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பணத்தை கொட்டினால் நிலம் கிடைக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் கூறமாட்டேன் என்றார்.

இதில் விந்தை என்னவென்றால் அரசு நிலத்தை போலியாக பதிவு செய்து கொடுக்கும் ரெஜிஸ்டிரார்கள் சிக்குவதில்லை. 1,275 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டது குறித்து பெங்களூர் பெருநகர வளர்ச்சி கழகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்த ஊழலில் சாதாரண அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை பலருக்கு தொடர்பு உள்ளது என்று கூறப்படுகின்றது.

தனியாருக்கு விற்கப்பட்டுள்ள இந்த நிலங்கள், அரசு அலுவலகங்கள் மூலம் சட்டப்படி பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+