குஸ்வாஹா குட்டை உடைத்ததே இளைஞர் காங். தான்: ராகுல் காந்தி
கோரக்பூர்: உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் குஸ்வாஹாவின் குட்டை உடைத்ததே இளைஞர் காங்கிரஸார் தான் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கூறியதாவது,
ஊழல் புகாரில் சிக்கிய குஸ்வாஹாவை உத்தர பிரதேச மாநில முதல்வர் மாயாவதி பதவி நீக்கம் செய்தார். ஆனால் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி வரும் பாஜக அவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது.
தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் குஷ்வாஹா ஊழல் செய்தது குறித்து சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தே இளைஞர் காங்கிரஸார் தான்.
பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன் குஸ்வாஹா நேராக எங்களிடம் தான் வந்தார். தன்னை காங்கிரஸுடன் இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும், வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் தெரிவித்தார். ஆனால் நாங்கள் அவரை கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டோம். ஊழல் செய்த உங்களை காப்பாற்ற மாட்டோம், நிச்சயம் சிறைக்கு அனுப்புவோம் என்று தெரிவித்து அனுப்பி விட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications