புயல் பாதித்த மக்கள் தாக்குகிறார்கள்...கடலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஸ்டிரைக்
கடலூர்: புயல் நிவாரண நிதியை கூடுதலாக கேட்டு கிராம நிர்வாக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து கடலூர் தாலுகாவில் இன்று ஒருநாள் வி.ஏ.ஓக்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் சுணக்கம் அடைந்தன.
கடந்த டிசம்பர் 30 ம் தேதி தானே புயல் தாக்கியதால் கடலூர் மாவட்டத்தில் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பிடமும், உடமைகளும் இன்றி தவிக்கும் மக்கள் பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு தமிழக அரசு 2500 ரூபாய் அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையை விட கூடுதலாக 5000 ரூபாய் வரை நிவாரணம் வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதில் நிவாரணத் தொகை வழங்கச் சென்ற வி.எ.ஓக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஏழு வி.ஏ.ஓக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒருநாள் வேலை நிறுத்தம்
கிராம நிர்வாக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கடலூர் தாலுகா வி.ஏ.ஓ சங்கத் தலைவர் நடராஜன் கூறியதாவது,
அரசு கூறிய நிவாரணத் தொகையை மட்டுமே எங்களால் வழங்கமுடியும், கூடுதல் நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரிகளை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்றார்.
கடலூர் தாலுகாவைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகளின் வேலைநிறுத்தம் காரணமாக நிவாரணப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 55 கோடி ரூபாய் வரை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications