மயிலை ஆட்டோ டிரைவர் திருவான்மியூரில் படுகொலை-போலீஸ் விசாரனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாப்பூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் திருவான்மியூரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவான்மியூர் காமராஜர் கிழக்கு 3-வது தெருவில் ஞாயிறுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஆட்டோவில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார் என்று தெரியாமல் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவான்மியூர் போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தது மயிலாப்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அரிகிருஷ்ணன் (27) என்பது தெரியவந்தது. வாடகை ஆட்டோ ஓட்டி வரும் இவரை யாரோ அங்கிருந்து கடத்திச் செனறு கொலை செய்தது தெரியவந்தது.

கொலைக்கு காரணம் காதலா?

மயிலாப்பூரில் சிதம்பரசாமி கோவில் 3-வது தெருவில் வசித்து வந்த அரிகிருஷ்ணன் காய்த்ரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த பெண் திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் அவரது பெயரை ஆங்கிலத்தில் மார்பில் பச்சை குத்தியுள்ளார்.

காயத்ரியைப் பார்ப்பதற்காக அரிகிருஷ்ணன் அடிக்கடி திருவான்மியூர் பகுதிக்கு சென்று வந்துள்ளார். ஞாயிறன்றும் இதேபோல அங்கு சென்ற இடத்தில் அரிகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அவரது காதலியின் உறவினர்கள் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு திருவொற்றியூரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் அரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருந்துள்ளது. இதற்கு பழிக்குப்பழி வாங்கும் செயலில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+