தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்க தயார்: ராஜபக்சே உறுதி

4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த திங்கட்கிழமை அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பொங்கல் கொண்டாடினார். இதையடுத்து அவர் நேற்று காலை ராஜபக்சேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடம் நீடித்ததாகத் தெரிகிறது.
அப்போது கிருஷ்ணா இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்பது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது, இரு நாடுகளுக்கிடையேயான உறவு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பது குறித்து அதிபரிடம் வலியுறுத்தினார். மேலும் தமிழர்கள் மறு குடியமர்த்துவது குறித்து விரிவாகப் பேசினார்.
அதிகாரங்களை பகிரந்தளிப்பதைத் தான் அநநாட்டில் வாழும் தமிழர்கள் நீண்ட காலமாக எதிர்பபார்க்கின்றனர். எனவே, விரைந்து அவர்களுக்கு அதிகாரங்கள் கொடுக்குமாறு கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது பிரிவின்படி தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிரந்தளிக்க இலங்கை தயாராக இருப்பதாக ராஜபக்சே உறுதியளித்துள்ளார்.
தமிழர்களை மறுகுடியமர்த்துவது குறித்தும், இதற்காக இந்தியா அளித்த உதவியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் உடனிருந்தார்.
இதையடுத்து கிருஷ்ணா இலங்கை பிரமதர் டி.எம். ஜெயரத்னேவை சந்தித்து பேசினார். பிறகு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை வாழ் தமிழர்களுக்கு 49,000 வீடுகள் கட்ட இந்தியா நிதி அளிக்கும்.
இலங்கையி்ல உள்ள தமிழர் அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்த கிருஷ்ணா இனப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications