தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்க தயார்: ராஜபக்சே உறுதி

4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த திங்கட்கிழமை அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பொங்கல் கொண்டாடினார். இதையடுத்து அவர் நேற்று காலை ராஜபக்சேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடம் நீடித்ததாகத் தெரிகிறது.
அப்போது கிருஷ்ணா இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்பது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது, இரு நாடுகளுக்கிடையேயான உறவு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பது குறித்து அதிபரிடம் வலியுறுத்தினார். மேலும் தமிழர்கள் மறு குடியமர்த்துவது குறித்து விரிவாகப் பேசினார்.
அதிகாரங்களை பகிரந்தளிப்பதைத் தான் அநநாட்டில் வாழும் தமிழர்கள் நீண்ட காலமாக எதிர்பபார்க்கின்றனர். எனவே, விரைந்து அவர்களுக்கு அதிகாரங்கள் கொடுக்குமாறு கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது பிரிவின்படி தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிரந்தளிக்க இலங்கை தயாராக இருப்பதாக ராஜபக்சே உறுதியளித்துள்ளார்.
தமிழர்களை மறுகுடியமர்த்துவது குறித்தும், இதற்காக இந்தியா அளித்த உதவியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் உடனிருந்தார்.
இதையடுத்து கிருஷ்ணா இலங்கை பிரமதர் டி.எம். ஜெயரத்னேவை சந்தித்து பேசினார். பிறகு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை வாழ் தமிழர்களுக்கு 49,000 வீடுகள் கட்ட இந்தியா நிதி அளிக்கும்.
இலங்கையி்ல உள்ள தமிழர் அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்த கிருஷ்ணா இனப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications