காமன்வெல்த் ஊழல்: 9 மாதங்கள் கழித்து கல்மாடிக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil

2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. அப்போது காமன்வெல்த் ஜோதி ஓட்டம், விளையாட்டு சாதனங்கள் வாங்கியது, கட்டுமானப் பணி என பல்வேறு பணிகளில் பெருமளவில் பல நூறு கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்து நாடே அதிர்ந்தது. இந்த ஊழல் வழக்கில் காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு கல்மாடி விடுதலை ஆகவிருக்கிறார்.












Click it and Unblock the Notifications