For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார்கண்ட்: நக்சலைட்டுகள் நிலக்கண்ணி வெடிதாக்குதல்: 13 போலீசார் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கார்வா: ஜார்கண்ட் மாநிலத்தில் நச்சலைட்டுகள் நடத்திய நிலக்கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 13 போலீசார் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்த போலீசாரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்ட வனப்பகுதிக்குள் நக்சலைட்டுகளை பிடிக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு பதித்து வைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடியில் சிக்கினர். இந்த தாக்குதலில் அதில் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட எஸ்.பி., பண்டாரியா போலீஸ் எல்லைக்குள் கண்ணிவெடி செயல் இழக்க செய்யும் வாகனத்தில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் இன்னும் வரவில்லை என்றார்.

ஜார்கண்ட், சட்டீஸ்கர், மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் சமீப காலமாக அடங்கியிருந்தது . இந்நிலையில் இன்று கண்ணிவெடி தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
More than 13 policemen were today killed in a landmine blast in Jharkhand. One cop has been reported missing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X