மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 2 பேர் கைது

கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மும்பையின் ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் மற்றும் தாதார் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 27 பேர் பலியாகினர், 137க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் நகீ அகமது(22), நதீ்ம் முக்தார் ஆகிய 2 பேர் பீகார் மற்றும் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப்படை தலைவர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
மும்பை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த தனிப்படை 18 மாநிலங்களில் 12,373 பேரிடம் விசாரணை நடத்தியது. மேலும் 180 சிசிடிவி காமராக்களில் பதிவான படங்கள் பரிசோதிக்கப்பட்டது. குண்டுவெடிப்புகளை நிகழ்த்த எங்கிருந்து பணம் வந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. எங்கள் விசாரணைக்கு இறுதியில் வெற்றி கிடைத்து இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் சிக்கியுள்ளனர் என்றார்.
இந்த குண்டுவெடிப்புகளுக்கு பணம் கொடுத்து முக்கிய மூளையாக செயல்பட்ட ஷாருக் ஷாபந்தாரி (எ) யாசின் பட்கல் தப்பியோடிவிட்டான். நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு தான் காரணம் என்று மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப்படை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications