சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ். மணியன் மரணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. பி. பி.எஸ். மணியன் (84) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

மேலசின்னனம்பட்டியைச் சேர்ந்தவர் பி.எஸ். மணியன். அவர் கடந்த 1967ம் ஆண்டு சோழவந்தான் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார். 1974ம் ஆண்டில் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவராகவும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்தார். பின்னர் 1978ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அடுத்து 1996ம் ஆண்டு மதிமுகவில் இணைந்தார்.

2006ம் ஆண்டில் மதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றார். அந்த ஆண்டே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அறிந்த திமுக தலைவர் கருணாநிதி அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த மணியன் நேற்று தனது சொந்த ஊரான மேலசின்னனம்பட்டியில் மரணம் அடைந்தார். அவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+