உள்நோக்கத்துடன் வழக்கு போடும் அதிமுக அரசு: அன்புமணி
வரும் தேர்தலில் பாமக தலைமையில் வலுவான அணி அமையும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
மதுரையில் ஐந்து மாவட்டங்களுக்கான பாமக பொதுக்குழு கூட்டம் செல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி நிருபர்களிடம் பேசுகையில்,
டாக்டர் ராமதாஸ் மீது பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது. அமைதியாக இருக்கும் எங்கள் மீது அதிமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் இதுபோல வழக்குகளில் அரசு கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதிமுக அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடுத்துள்ளது. அமைச்சரின் தூண்டுதலின் பேரிலேயே காவல்துறை இந்த வழக்கை தொடுத்துள்ளது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். சட்டப்படி வழக்கை எதிர்கொள்வோம்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தாததால் அந்த மாநிலத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
கொலை, கொள்ளை என நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. வரும் தேர்தலில் பாமக தலைமையில் வலுவான அணி அமையும் என்றார்.












Click it and Unblock the Notifications