தென்மாவட்டங்களில் கள்ள நோட்டு புழக்கம்: தீவிரவாதிகள் கைவரிசை
நெல்லை: நெல்லை வங்கிகளில் இருந்து சென்னைக்கு சென்ற ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுகள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஏராளமான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளதை சமீபத்தில் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் கள்ள நோட்டுகளுடன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் ஷேக் என்ற வாலிபர் பிடிபட்டார். அவரிடம் இருந்து புதுவை போலீசார் ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவருடன் தங்கியிருந்த மேலும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் சென்னை, புதுவை தவிர தென்மாவட்டங்களிலும் ஏராளமான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் வங்கிகளில் கட்டப்படும் ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கள்ள நோட்டுகளா என்று ஆய்வு செய்து அதன் பிறகே மறுசுழற்சிக்கு விடுகிறார்கள்.
இதன்படி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி பொது மேலாளர் லோகநாதன் நெல்லையிலுள்ள வங்கிகளில் இருந்து சென்ற ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்தார். இதில் நெல்லை இநதியன் வங்கிக் கிளையில் இரண்டு நூறு ரூபாய் கள்ள நோட்டுகளும், மகராஜா நகர் ஐஓபி வங்கிக் கிளையில் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டும், ஸ்ரீபுரம் ஸ்டேட் வங்கியில் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டும் நல்ல ரூபாயுடன் கலந்து காணப்பட்டது. இதனால் நெல்லை உள்பட தென்மாவட்டங்களிலும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் லோகநாதன் நெல்லை மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
கமிஷனர் கருணாசாகர் உத்தரவின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸபெக்டர் எக்ஸ்கால் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ள நோட்டு கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பொது மக்கள் 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க அஞ்சுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பலர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications