உள்துறை முதன்மைச் செயலராக ராஜகோபால் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அமைச்சர்கள் மட்டுமின்றி அரசு உயர் அதிகாரிகளும் அடிக்கடி இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு, இன்றும் ஐ.ஏ.எஸ், மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
நேற்று வெளியான தமிழக அரசின் செய்திக் குறிப்பில், உள்துறை முதன்மைச் செயலராக இருந்த ரமேஷ்ராம் மிஷ்ரா வருவாய்த்துறை தலைமைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
அதே போல, வருவாய்த்துறை தலைமைச் செயளராக பணியாற்றி வந்த ராஜகோபால், உள்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட எஸ்.பி.-யாக அஸ்வ்வின் கோட்னிஸ் முகுந்த் -ம், செயின்ட் தாமஸ் மவுன்ட் காவல்துறை துணை ஆணையராக சரணவனும், சென்னை பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி.எஸ்.பி -யாக முத்துசாமி-யும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications