உபியில் ராகுல் காந்தியின் பாச்சா பலிக்காது: பர்தன் பேச்சு
பாட்னா: உத்தர பிரதேசத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் பேச்சால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தன் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதயைடுத்து ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் ராகுலின் பேச்சு எடுபடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உத்தர பிரதேசத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சாரத்தால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் 1 முதல் 4 இடங்களில் கூடுதலாக வெற்றி பெறலாம். தேர்தலில் 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடிக்கத் தான் காங்கிரஸும், பாஜகவும் போட்டு போடுகின்றன.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே தான் ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மக்கள் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்திருப்பதால் அது மக்களுக்கு நல்ல மாற்றாக அமையும். கம்யூனிஸ்ட் கட்சி சில இடங்களைக் கைப்பற்றவும் வாய்ப்பு உள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications